Friday, April 26, 2019

ரிசார்ட் பதுயுதீனின் சகோதரனை இராணுவம் கைது செய்ய பொலிஸ் விடுதலை செய்துள்ளது.

இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட ரிசார்ட் பதுயுதீனின் சகோதரன் , மேலதிக விசாரணைகளுக்காக பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் அவரை விடுதலை செய்துள்ளனர்.

நாட்டில் உருவாகியிருக்கின்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு பல்வேறு வழிகளில் ரிசார்ட் பதுயுதீன் உட்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்து உதவி வந்துள்ளனர் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது செப்புத் தொழிற்சாலையில் மீள்சுழற்சி செய்வதற்கென்ற போர்வையில் அவற்றை பெற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதியான இன்சாப் அஹமட் அவற்றை குண்டுதயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

ரவைக் கோதுகளை கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக இன்சாப் அஹமட் கொள்வனவுச் செய்வதற்கு, வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான றிசார்ட் பதுயுதீன் உதவி புரிந்துள்ளதாக சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை, ரிசாட் பதியுதீனின் கீழுள்ள வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.

வர்த்தகர் ஒருவர் என்ற அடிப்படையில், கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தம்மை அவர் பதிவுசெய்துள்ளார்.

இதற்கமைய, கொலோசஸ் பிரைவட் லிமிட்டட், இல.111ஃ6, அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டி என்ற முகவரியில், 1611216 பதிவு இலக்கத்தில் எம்.ஐ.இன்சாப் என்ற பெயரில் இதற்கான பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இவர் வெற்று ரவைக் கோதுகளை கொள்வனவுச் செய்து வந்துள்ளதுடன், செப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தமது தொழிற்சாலைக்கு இதனை கொள்வனவு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களிற்கான வெடிகுண்டுகள், இந்த வெல்லம்பிட்டி செப்பு தொழில்சாலையில் தயாரிக்கப்ட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவு கருதுகிறது.

No comments:

Post a Comment