Tuesday, April 9, 2019

மாகாண சபைகள் முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும். ஒமல்பே சோபித தேரர்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமை இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளில் 450 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர்களின் ஊதியங்களுக்கு மாத்திரம் 225 கோடி ரூபா செலவாவதாகவும் குறிப்பிட்ட அவர் மேலதிக பாராமிப்புச் செலவுகளுடன் பார்க்கும்போது உறுப்பினர்களை பராமரிக்க மாத்திரம் வருடமொன்றுக்கு 500 கோடி ரூபா செலவவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த முதலீட்டினால் நாட்டுக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை என்றும் மாறாக அது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கி மக்களை மேலும் சிரமத்திற்கு உட்படுத்துவதாகவும் ; தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டிலே 7 சபைகள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சபைகளும் இயங்கவில்லை என்பதற்காக நாடு இயங்கவில்லையா? இல்லை அது சிறப்பாக இயங்குகின்றது. எனவே மாகாண சபைகள் என்பது அநாவசியமான ஒன்று என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது. இது இந்திய அரிசினால் எம்மீது சுமத்தப்பட்ட தேவையற்ற சுமை.

இதை நாம் பயங்கரவாதத்திற்கு பதிலாகவே பொறுப்பெடுத்தோம் தற்போது இந்நாட்டில் பயங்கரவாதம் இல்லை. எனவே இந்த மாகாண சபை முறையையும் இல்லாது ஒழிக்கவேண்டும் என ஒமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment