Wednesday, April 3, 2019

அடைக்கலநாதனின் பேச்சு நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்ட மக்களின் புண்ணில் தீயினால் சுடுவது போன்றது. மறவன்புலவு ஆவேசம்.

நாடாளுமன்றத்தில் 3.4.2019 இன்று இந்து விவகார, இன நல்லிணக்க அமைச்சுத் தொடர்பாகச் செல்வம் அடைக்கலநாதனின் பேச்சு இலங்கையில் வாழ்கின்ற 22 லட்சம் சைவ மக்களின் நெஞ்சத்தைத் திருக்கேதீச்சரத்தில் ஈட்டியால் குத்திய புண்ணில் தீப்பிழம்பால் சுடுவது போல் எரிக்கிறது.

இந்தக் கொடுமையான உரையைச் சைவ மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் சிவசேனையின் தலைவன் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைத்கலநாதனின் பாராளுமன்ற உரை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு என்ற வரிகளைத் தெரிந்தவர்கள் செல்வம் அடைக்கலநாதனின் அறிவுக் குறைவை மிக எளிதாக கண்டு அறிவார்கள்.

கத்தோலிக்கர்களால் திட்டமிட்ட நிகழ்வாகத் திருக்கேதீச்சர வளைவு உடைந்தது.

பாதிரியார் எனப் போர்வை அணிந்து வந்த மார்க்கசு அங்கே நின்று உடைப்பவர்களை ஏவிக் கொண்டிருப்பதைக் காணொளிகளில் பார்க்கலாம் கேட்கலாம்.

உடைப்புக்கு முன்பே பாதிரியார் அங்கு வந்து விட்டார்.

அவர் அங்குள்ள ஊடகவியலாளரை மிரட்டியிருக்கிறார்.

அங்கு நின்ற மற்றவர்களை மிரட்டியிருக்கிறார்.

தன் அடியாட்களை உடைக்குமாறு ஆணையிட்டிருக்கிறார்.

இதை எல்லாம் மறைத்துச் சைவர்களின் மனத்தைப் புண்படுத்திய செல்வம் அடைக்கலநாதனுக்குச் சைவ மக்கள் ஒருபொழுதும் வாக்களிக்கக் கூடாது.

இயேசுவைக் கடவுள் என்கிறார். முட்டாள்கள்தான் இப்படிப் பேசுவர்.

இயேசுவே தன்னை இறைத்தூதர் என்றும் தனக்கு மேலே ஒரு கடவுள் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்

தன்னைக் கடவுளாக அவர் எப்பொழுதும் அறிவித்ததே இல்லை

விவிலியத்தைப் படிக்காதவர்கள் சிறுவயதிலேயே படிப்பை விட்டு இயேசுவின் கொள்கைக்கு எதிராக இயேசுவின் போதனைகளுக்கு எதிராக மலைப்பிரசங்கத்தில் கூறியவைக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள்

சைவ சமயம் என்றால் மருந்துக்குக்கூட தெரிந்திருக்காதவர்கள் சைவ கொள்கைகளை அறிந்திருக்காதவர்கள் சிவனைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்கள்

இவர்கள் எல்லாம் சிவனைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் பேசுகிறார் என்றால் மன்னார் மக்கள் செய்த மாபெரும் தவறேயாம்

இவர்களைப் போன்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மன்னார்க் கத்தோலிக்க மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள் சைவர்களின் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .

1 comment:

  1. I think this internet site holds some rattling good info for everyone :D.

    ReplyDelete