Monday, April 22, 2019

குண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.

லுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர்.

ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு தனது செலவில் குழந்கைளுக்கான வார்ட் ஒன்று கட்டிக்கொடுத்துள்ளார். இம்முறை தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் வந்த அவர் தற்போது மனைவியை பலிகொடுத்துவிட்டு அவரது உடலை கொழும்பிலுள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைத்து காத்திருக்கின்றார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறுகின்றார்.

எங்களுக்கு இலங்கை மீது அளவுகடந்த விருப்பம் உண்டு.

இந்த நாட்டுக்கு உதவவும் விரும்பினோம். எமது பணத்தில் ரத்தினபுர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு சிறார்களுக்காக வார்ட்டு ஒன்றை கடந்த வருடம் மே மாதத்தில் கட்டிக்கொடுத்தோம்.

ஒருவருடத்தின் பின்பு அது எவ்வாறு உள்ளது என்பதை பார்வையிட வந்தோம். பார்த்தோம் மிக சந்தோஷமடைந்தோம்.

இவற்றையெல்லாம் முடிந்துக்கொண்டு இன்று (நேற்று) புறப்பட இருந்தோம். புறப்படுவதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம்.

எனது மனைவியும் மகனும் ஒரு மேசையில் உட்கார்ந்தனர். நானும் அடுத்த முன்று மகள்களும் பக்கத்து மேசையில் உட்கார்ந்தோம்.

சாப்பிடத் தொடங்கியதும் பாரிய சத்தம் ஒன்று கேட்டது. மனைவியும் மகனும் விழுந்து கிடந்தனர்.

வைத்தியசாலைக்குச் சென்றபோது மனைவி இறந்து விட்டதாக கூறினார்கள்..

மகன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.



No comments:

Post a Comment