Tuesday, April 9, 2019

அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலிருந்து இரு கைத்துப்பாக்கிகள் மாயம்.

பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையிருந்து இரு துப்பாக்கிககள் கானாhமல் போயுள்ளதுடன் இதுதொடர்பில் அக்கரப்பத்தனை பிரசேச பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரேலிய மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியம் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பொறுப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 23ம் திகதி இரு கைத்துப்பாக்கிகள் காணாமல்போயுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான சார்ஜன்ட மீது வெறுப்புக்கொண்ட சக உத்தியோகித்தர்கள் ஏவராவது மேற்படி செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கலாம் அன்றில் பிற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment