Friday, April 26, 2019

தவறான புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு பல்லிளிக்கின்றது இலங்கை பொலிஸ்

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்படும் 6 சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வியாழக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்கும்.

இப்புகைப்படங்களை வெளியிட்டு சற்று நேரத்தின் பின்னர் அது தவறானதோர் படம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்தபடம் தவறான என்பதை பொலிஸ்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. படத்திற்கு உரியவர் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அப்துல் காதர் பாத்திமா கதியா என்பவர் தேடப்படும் நபர்தான் என்றும் தாம் வெளியிட்டுள்ள படம் தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல்லிளித்துள்ள இலங்கைபொலிஸ் பேச்சாளர் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமக்கு அனுப்பி வைத்த புகைப்படங்களையே தாம் வெளியிட்டதாக வேறு உள்ளக காட்டிக்கொடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளது.


No comments:

Post a Comment