Wednesday, April 24, 2019

பர்தாவை தடைசெய்யுமாறு பிரேரணை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிரச்சுறுத்தல்!

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தடைசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாரசிங்க பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முஸ்லிம் அமைப்பு ஒன்றின் பிரதான நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

தங்களுடைய பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ளுங்கள், பிரயாணங்களையும் அவதானமாக மேற்கொள்ளுங்கள் என அந்த நபர் தெரிவித்ததாக கலாநிதி மாரசிங்க நெருக்கமானவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இநேநேரம் இலங்கையில் பர்தா தடை செய்யப்படவேண்டும் என சங்கைக்குரிய தேரர் அத்துரிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரான அவர் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டி நாட்டில் பர்தா அணிவதால் பாதுகாப்புக்கு உள்ள சவால்கள் தொடர்பில் விளக்கியிருந்தார்.

இதேநேரம், பர்தா தடை செய்வது தொடர்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பா.உ முஜிபிர் ரஃமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்த அவர், எனது மனைவியார் முகத்தினை மூடிக்கொள்வதில்லை அவ்வாறே எனது பிள்ளைகளையும் மூடிக்கொள்ளுமாறு நான் கூறப்போவதும் இல்லை. எனவே அது முஸ்லிம்களை பொறுத்தவரை பெரிய பிரச்சினையும் இல்லை. நாம் இது தொடபில் உலாமாக்களுடன் பேசி மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்க்கத்தில் முகம் தெரிய அணியவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment