Monday, April 29, 2019

பாதுகாப்புத்துறையில் அதிரடி மாற்றம். பூஜிதவிற்கு கட்டாய லீவு. புதிதாக சி.டீ. விக்ரமரத்ன.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆம் போகின்றேன் என்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தத்தில் பதவி விலகாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூடியபோது பேசிய மைத்திரி : நான் பொலிஸ் மா அதிபரை பதவி விலகக்கூறினேன். ஆனால் அவர் விளையாட்டு காட்டப்பார்கின்றார். அவர் கடமையை சரிவரச் செய்திருந்தால் இத்தனை சேதங்களையும் தடுத்திருக்கமுடியும். எனவே கடமையைச் சரிவரச் நிறைவேற்றாது கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்படலாம் என ஒரு மிரட்டலை விட்டிருந்தார்.

அத்துடன் இன்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பியுள்ள மைத்திரி, பதில் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவை நியமித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஷாந்த கோட்டேகொட நியமனம் பெற்றுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment