Sunday, April 28, 2019

தற்கொலைதாரிகள் சிலர் இந்தியாவிலேயே பயிற்சி பெற்றுள்ளனர்! மேலும் சிலர் பெறுகின்றனர். அதிரும் தகவல்

இந்தியா மீண்டுமொருமுறை தனது ஆட்டத்தை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பமானபோது, இந்திய தனது மண்ணில் கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக ஆயுதப்பயிற்சியை கொடுத்ததும், பின்னர் அது இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதும் யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை வைத்து இந்தியா, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் ஒன்றை எழுதிக்கொண்டார்கள் என்பதே இலங்கையின் நாட்டுப்பற்றாளர்களின் கணிப்பும் ஆதங்கமும்.

இந்நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையிலே இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள். இத்தாக்குதல் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு காலநேரத்தோடு மூன்று முறை அறிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் பிரகாரம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தாக்குலில் நேரடியாக பங்கெடுத்தோர், அடுத்தடுத்த தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்தோர், அதன் வழிகாட்டிகள், அமைப்பின் உறுப்பினர்கள், உதவி-ஒத்தாசை புரிந்தோர், பயங்கரவாதிகளின் குடும்ப அங்கத்தினர் என பட்டியல் நீண்டு செல்கின்றது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தற்கொலைக் குண்டுதாரிகள் சிலர் இந்தியாவில் பயிற்சியினை பெற்றவர்கள் என்றும் இன்னும் சிலர் அங்கு பயிற்சிகளை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இந்திய அரசு நேரடியாக பயிற்சிகளை வழங்கியது யாவரும் அறிந்தவிடயம். ஆனால் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு இந்திய அரசு நேரயான பயிற்சியினை வழங்கியதான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் இந்தியாவிலுள்ள சில அமைப்புக்களாலேயே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அந்த அமைப்புக்கள் இந்திய அரசின் அனுசரணையுடன் செயற்படும் அமைப்புக்களா என்பதே தற்போது தேடப்படுகின்ற விடயமாகும்.

பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை வைத்துக்கொள்ளவிரும்பும் இந்திய அரசு பாக்கிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் நேபாளம் போன்ற நாடுகளை எவ்வாறு பிரித்தது என்றும், அது ஆசிய நாடுகளுள் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் விடயங்களும் யாவருக்கும் தெளிவானது.

இவ்வாறான சூழலில் மீண்டுமொருமுறை இந்தியா இலங்கையின் முதுகில் குத்துவற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை தேர்ந்தெடுத்துள்ளதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

No comments:

Post a Comment