Sunday, April 21, 2019

இலங்கையில் 6 குண்டுகள் வெடிப்பு. நான்கு தேவாலயங்கள். 3 ஹோட்டல்கள் இலக்கு 40 பலி! 300 மேற்பட்டோர் காயம்.

இலங்கையின் பலபாகங்களிலுமுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 3 பிரபல ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளது. இவ் ஏழு குண்டு வெடிப்பிலும் இதுவரை 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 300 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் அதிக உல்லாசப்பயணிகள் உள்ள சங்கரிலா , சினமன் கிறான்ட கிங்ஸ்பெரி ஆகிய ஹோட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிக்சைகளுக்காக நலன்விரும்பிகளிடமிருந்து இரத்தம் வேண்டப்படுகின்றது.





No comments:

Post a Comment