Monday, April 29, 2019

குண்டுகளை கண்டறிய தனது செல்லப்பிராணிகளான 5 நாய்களை இராணுவத்துக்கு பரிசளித்த சீமாட்டி

இலங்கையில் உருவாகியுள்ள வெடிகுண்டு பீதிகளை அடுத்து அவற்றை கண்டு பிடிப்பதற்காக சர்வதேச பல்கலைக் கழகம் ஒன்றின் விரிவுரையாளரான ஷிரு விஜேமான என்ற பெண் தனது நாய்களை இராணுவத்தினருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இவர் அளித்துள்ள 5 ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் தாய் நாய் வயது இரண்டு ஆண்டுகளும் மற்ற நாய்களின் வயது ஆறு மாதங்களும் ஆகின்றன. இவை அனைத்தையும் இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரகென்பிட்டி பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கே வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தார்.

வெடிபொருட்களையும் போதை மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் ராணுவத்தினரின் செயல்பாடுகள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்நாய் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் இந்நாய்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் இந்நாய்களுக்கு குறிப்பிட்ட முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment