Monday, April 22, 2019

குண்டை வெடிக்க வைப்பதற்கு 1000 ரூபா.. கோழைத்தனமான வியூகம்

கொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து குண்டானது இன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இக்குண்டினை வெடிக்க வைப்பதற்கு பயங்கரவாதிகள் மிக கோழைத்தனமான வியூகம் ஒன்றை கடைப்பிடித்துள்ளனர்.

இவ்வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டின் இயங்குஆழியை வானின் கதவை திறக்கும்போது வெடிக்ககூடியவாறு வடிவமைத்துள்ளனர்.

வடிவமைக்கப்பட்டிருந்த வாகனத்தின் ஒரு பகுதியை கறுப்பு ஸ்ரிக்கரால் மறைத்தும் வைத்துள்ளனர்.

அத்துடன் வாகனத்தினுள் ஆயிரம் ரூபா தாள்களை மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவாறு பரவி விட்டிருந்த அவர்கள் அதன் வாயிலிலும் பணத்தாள்களை விட்டுள்ளனர்.

அதாவது பணத்தை காணுகின்ற எவராவது பணத்தை எடுப்பதற்காக கதவை திறக்க முற்படுகின்றபோது , குண்டு வெடித்து சிதறும் என்பதே அவர்களது வியூகமாக இருந்துள்ளது.

இந்த வாகனத்தில் வந்து இறங்கிய இருவரில் ஒருவரே கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டினை வெடிக்க வைத்தவர் என்று நம்பப்படுகின்றது.

குண்டு வெடித்துடன் குறித்த வாகனம் எரிந்து சாம்பலாகியதுடன் அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேனில் கதவுகள் திறக்கப்பட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயழிழப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்படடில், துறைமுக பகுதிக்குள் இருந்து செயற்கை அதிர்வு கொடுக்கப்பட்டு பெட்டிகளில் இருந்த வெடிக்கச் செய்யப்பட்டது. இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

No comments:

Post a Comment