Monday, March 11, 2019

இன்று கூட்டமைப்பை சந்திக்கும் JVP

20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக JVP அறிவித்துள்ளது.

இரண்டு கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு JVP யின் கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக JVP தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 6 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலாவது கட்ட சந்திப்பை நடாத்திய JVP, இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், சில நாட்களுக்குள் பிரதமர் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment