Tuesday, March 12, 2019

நாட்டின் அரசியல் நிலை குறித்து JVP - TNA கட்சிகளுக்கிடையே சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் அரசியல் நிலை குறித்து கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கே. கோடீஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள்.

அதேபோன்று, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ. லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment