Wednesday, March 13, 2019

ரயிலுடன் காரொன்று மோதி ஒருவர் பலி - தெல்தெனிய Bus விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

மாத்தறையில் ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மாத்தறை பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் ரயில் குறுக்கு வீதியில், இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் விபத்துக்குள்ளாகிய காரில் பயணித்துள்ளார்கள். இந்தநிலையில் ரயில் போக்குவரத்து நடைபெறுவதற்கான அபாய சமிக்ஞை ஒலித்தபோதிலும் காரை ரயில் பாதையூடாக செலுத்துவதற்கு முற்பட்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காரில் பயணித்த 53 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, தெல்தெனிய பகுதியில் கண்டியிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று விபத்துக்குள்ளாக்கியத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமைடந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ள நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment