Saturday, March 16, 2019

ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு இனத்துக்கு மாத்திரமே தண்ணீர் வழங்குகின்றார். கோடீஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அமைச்சர் ரவூஃப் ஹக்கீமின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாளுக்குரிய குழுநிலை விவாதம் நேற்றைய அமர்வில் நடைபெற்றபோது, அமைச்சர் ஹக்கீமின் மீதான அதிருப்தியை அவர் வௌிப்படுத்தினார்.

அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு எவ்வகையான உதவிகளைச் செய்தார்? என க.கோடீஸ்வரன் கேள்வி எழுப்யுள்ளார்.

அங்குள்ள தமிழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் உள்ளபோது அமைச்சர்
குறிப்பிட்ட ஒரு இனத்தவருக்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் மேற்கொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தினார்.

”நீங்கள் குறிப்பிட்டதொரு இனத்திற்கு அமைச்சர் அல்ல. நீங்கள் இந்நாட்டிற்குரிய அமைச்சர்,” என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உள்ளிட்ட11 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment