Saturday, March 9, 2019

வரலாற்று பாடங்களை கற்றுக்கொண்டு, சமூகத்தை வெற்றி கொள்ள வேண்டும் - சஜித் பிரேமதாஸ

வரலாற்று பாடங்களை கற்று, அதன் அனுபவங்களை கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை வெற்றி கொள்ள அனைவரும் செயற்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் அமைக்கப்பட்டுள்ள பொன்னொளி நகர் வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 66 வீடுகளை கொண்ட இந்த மாதிரி கிராமத்திற்காக 623 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் 176வது மாதிரி கிராமமாகும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று சவுக்கடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கற்பகத்தரு, நெய்தல் கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைக்கப்படவுள்ளன. இவை அரசாங்கம் முன்னெடுக்கும் கம் உதாவ - அனைவருக்கும் வீடு என்ற வேலைத்திட்டத்தின் 177 மற்றும் 178 ஆவது மாதிரிக் கிராமங்களாகும். இரு கிராமங்களிலும் 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment