Sunday, March 17, 2019

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படாமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே காரணம் - சினம்கொள்கிறார் மஹிந்த

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு விரோதமானது என்றும், இந்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் பறிபோனதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே எதிர்க்கட்சித்தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு சரிசமனான அபிவிருத்திகளை தனது அரசாங்கம் மேற்கொண்டதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கடன்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுப்பதை காணக்கூடிய விதத்தில் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment