Sunday, March 10, 2019

சவேந்திர சில்வா எதிர்நோக்கியுள்ள பிரச்சினை - ஐ நாவில் கண்டனம்

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு, ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ நாவின் மனித உரிமை ஆணையாளர் பசெலெட் இந்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 25 திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. குறித்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த இலங்கையின் இறுதி யுத்தத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டார்.

அவரது தலமையில் இராணுவம் போர்க்குற்றங்களை இளைத்துள்ளது. இறுதி யுத்தத்தில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை இராணுவத்தினர் மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுமார் 15 பக்கங்களைக் கொண்ட, இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment