Thursday, March 14, 2019

அரசாங்க ஸ்தாபனங்களில் வெற்றிலை மெல்லுவது, புகைப்பது தடை

அரச நிறுவன வளாகங்களில் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றனவற்றை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பிரகாரம் அரசாங்க நிறுவன வளாகங்களுக்குள் வெற்றிலை மெல்வதும் புகைப்பதும், வெற்றிலை அல்லது சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்வதும் தடைசெய்யப்படுகின்றது.

வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின் காரணமாக வாய்புற்று நோய் ஏற்படக்கூடிய நிலைமையை அவதானித்து இந்த தீர்மானம் எட்டப்பபட்டுள்ளது. நாட்டின் அரசாங்க ஸ்தாபனங்களில் கடமைபுரியும் பணியாளர் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வருகைத்தரும் பொதுமக்கள், வெற்றிலை பாக்கு மற்றும் புகைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

இதற்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக அரச நிர்வாக சுற்று நிருபத்தை வெளியிடுவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment