மஹிந்தானந்த அளுத்கமகேயுடைய மகனின் வாகனம் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரல்ல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24ம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்தது. இதன்போதே குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்திருந்தார்.
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட குழுவினர், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி மட்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எவ்வாறு இருந்த போதிலும் குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயங்களுக்கு இலக்காகி இருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment