Tuesday, March 19, 2019

''ரஞ்சன் ஒரு ஆண் பாலியல் தொழிலாளி'' - மஹிந்த அணி

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை, மஹிந்த ஆதரவு அணியினர், ''ஆண் பாலியல் தொழிலாளி'' என விமர்சித்தமையினால், இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோவே, ரஞ்சன் ராமநாயக்க குறித்து இவ்வாறு விமர்சனம் வெளியிட்டார்.

இந்த வருடத்துக்கான பாதீட்டின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கு கொண்டு, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டார்.

இதனை அடுத்து எழுந்த அருந்திக்க பெர்ணாண்டோ , வெளிநாடு ஒன்றில் ஆண் பாலியல் தொழிலாளியாக ரஞ்சன் ராமநாயக்க பணிபுரிந்ததாக கூறினார்.

இந்தக்கருத்தை அடுத்து, சபையில் கூடியிருந்த இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்கவை இவ்வாறு விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து மன்றில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment