Thursday, March 14, 2019

அரசை எச்சரிக்கின்றது முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால், தாம் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக, இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் தமக்கான எரிபொருள் மானியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை குறிப்பிட்டார். தாம் கோரியபடி எரிபொருளுக்கான உரிய மானியம் வழங்கப்படவில்லை எனில், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும் மீற்றர் கருவிகளை அகற்றபோவதாக குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எழுத்து மூலம் இது குறித்த சரியான தெளிவுபடுதலை வழங்கவுள்ளதாக, இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment