Sunday, March 17, 2019

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்காவிட்டால், அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் என்பதே நிதர்சனம் - மஹிந்த

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சர்வதேசம் முழுவதும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பற்றிய பேச்சுக்களும், பீதியும் அதிகரித்த வண்ணமிருந்தன.

இவ்வாறான சூழலில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் அபபாவிகளின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்திருக்கும் என, முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை - முவன்தெனியவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம் 2009 ஆம் ஆண்டு வெற்றிகொள்ளப்பட்டது. மக்கள் அன்று முதல் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வாழ்கின்றனர். எனினும் மக்களுக்காக போராடிய இராணுவத்தினர் இன்று குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டு, தண்டிக்கப்படுகின்றனர்.

எமது நாட்டின் 9 இராணுவத்தினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இராணுவத்தினர், எமது நாட்டுக்குள் வருவதற்கான அனுமதியில்லாமல் வெளிநாட்டில் உள்ளனர்.

இந்த செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இடம்பெறுகின்றது என, மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

1 comment:

  1. This is a good tip especially to those fresh to the blogosphere.
    Brief but very accurate info… Thank you for
    sharing this one. A must read post!

    ReplyDelete