Sunday, March 10, 2019

கேணல் ரத்தனபிரிய பந்து ஐ.நா நோக்கி புறப்படுகின்றார்.

சிவில் பாதுகாப்பு படையணியின் இயக்குனராகவிருந்து ஓய்வு பெற்றுள்ள கேணல் ரத்னபிரிய பந்து எதிர்வரும் வாரம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளார் எனத் தெரிவருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 40 வது அமர்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டே அவர் அங்கு செல்கின்றார்.

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் இயக்குநராக செயற்பட்டபோது, மக்களின் மனதை கவர்ந்த அதிகாரியாக பணியாற்றிய அவர், இடமாற்றம் பெற்றுச் சென்றபோது பிரதேச மக்கள் அவரை தோளில் சுமந்து ஊர்வலமாக சென்று தமது நன்றிகளை தெரிவித்திருந்தது யாவரும் அறிந்தது.

தற்போது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வன்னி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஐ.நா அமர்வுகளில் கலந்து கொள்ளும் கேணல் ரத்னப்பிரிய பந்து வன்னி மக்கள் அனுபவிக்கும் குறைபாடுகள் அவர்களது தேவைகள் தொடர்பில் தனது சேவைக்காலத்தில் இனங்கண்டவற்றை உலகிற்கு அறியப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment