Saturday, March 9, 2019

இலங்கைத் தேயிலைக்கு, ஆப்கானிஸ்தானில் அதிக கிராக்கி நிலவுகிறது - ஆப்கானிஸ்தான் தூதுவர்

இலங்கை அரசாங்கத்துடனும், தனியார் துறையினருடனும் அதிக வர்த்தக ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்ப ஆப்கானிஸ்தான் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் இதுவரையும் எந்தவொரு நாட்டுடனும் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், இரு நாட்டு ராஜதந்திர உறவுகள், சிறந்த தேயிலை வர்த்தக கொடுக்கல் வாங்கலினால் நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று தூதுவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கைத் தேயிலைக்கு ஆப்கானிஸ்தானில் அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment