Wednesday, March 13, 2019

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, கண்ணீர் புகை பிரயோக தாக்குதல்

இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோக தாக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து குறித்த மானவர்கள் மீது, காவல்துறையினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், தற்காலிகமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், உடன் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment