Sunday, March 17, 2019

பல மாகாணங்களில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் - இடர்முகாமைத்துவ நிலையம்

நாடுமுழுவதும் நிலவும் வறட்சி காரணாமாக சில மாகாணங்களில் நீருக்கான தட்டுப்பாடு நிலவும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக, இடர்முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வரட்சியுடனான வானிலையால் பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல மாவட்டங்களிலும் வரட்சியுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் என இடர்முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 40 அடி வரை குறைவடைந்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இடர்முகாமைத்துவ நிலையம் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment