Tuesday, March 19, 2019

அலுகோசு பதவி தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக நீதி அமைச்சு அறிவிதிருந்த நிலையில், அந்த திகதியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆகவே எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சையை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பிரஜை ஒருவரும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். நேர்முகப்பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment