Thursday, March 14, 2019

விசேட மேல் நீதிமன்றம் இன்று திறந்து வைப்பு - நீதி அமைச்சு

இலங்கையின் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று திறக்கப்படவுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் தலைமையில் இதன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம், பாரிய ஊழல் மோசடிகள் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட, மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முதலாவது விசேட மேல் நீதிமன்றம், கடந்த வருடம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விடேச மேல்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment