Tuesday, March 19, 2019

கோட்டாபய ராஜபக்சவையே மக்கள் விரும்புகிறார்கள் - உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டிய தேவை சகல தரப்பிடமும் உள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார். ஜநாயக பிரவேசமாக கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவேண்டியது தங்களது பொறுப்பு என்று கூறிய அவர், மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்து செயற்படவேண்டியதே ஜநாயக நாடொன்றின் பிரதான குறிக்கோளாகும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


No comments:

Post a Comment