Thursday, March 21, 2019

கையூட்டல் பெற்றுக்கொண்ட, களுத்துறை நகர சபை அதிகாரி கைது

கையூட்டல் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை நகர சபையில் கடமையாற்றி வந்த, கடமை நேர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி, களுத்துறை நகர சபையின் அனைத்து வாகனங்களுக்குமான காப்புறுதியை பெற்றுக்கொள்வதற்கென, தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றிடம் குறித்த நகரசபை அதிகாரி 15 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து குறித்த அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள், இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. இதன்போது கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராய்ச்சி, நகர சபை அதிகாரி கையூட்டல் பெற்றுக்கொண்டமை உறுதியானதுடன், அவருக்கு நான்கு வருடகால கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதாக உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment