Monday, March 18, 2019

நியுசிலாந்து கொலையாளி தனக்காக தானே வாதாடவுள்ளார். ஆயுதங்கள் இணையத்தினூடாக கொள்வனவு.

கிறிஸ்ட் சர்ச் பகுதியிலிருந்த இரு பள்ளிவாயல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி பிரெண்டன் டாரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ''டாரண்ட் மனதளவில் தடுமாறி இருக்கிறார். அவர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார்'' என்றார்.

அவ்வாறு நேர்ந்தால் அவர் தீவிரவாதக் கருத்துகளை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்று அச்சம் எழுந்துள்ளது.

இதேநேரம் சந்தேச நபரான் டாரன்ட் ஆன்லைனிலிருந்து துப்பாக்கி வாங்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனமான கன் சிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) கன் சிட்டி கூறும்போது, ''கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய டாரண்ட் ஆன்லைனிலிருந்துதான் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவர் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆன்லைனில் விற்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக்கு உரிமம் வைத்துள்ளனர். இதில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதற்கான ஆரம்ப வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment