Thursday, March 21, 2019

இது நாட்டையும் விற்பனை செய்யும் நிலை - மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, தங்காலை பிரதேச சபையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தனது விசனத்தை தெரிவித்துள்ளார். அதில், துறைமுகம் விற்பனை செய்யப்பட்டது. நாங்கள் கடன் வாங்கினோம். கடன் அதிகம் என்றனர். அதனை விற்பனை செய்வதாக இருந்தால் கடனை செலுத்துங்கள். சீனாவுக்கு கடனை செலுத்துங்கள். அவ்வாறு செய்யவில்லை. இந்தியாவிற்கு விமான நிலையத்தை விற்றனர். துறைமுகம் போன்றில்லை, வானத்தையும் அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிவரும். இது நாட்டையும் விற்பனை செய்யும் நிலை என்று கூறினார்.

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை தான் அமைக்காவிடின் மக்கள் இருளில் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.


No comments:

Post a Comment