Saturday, March 9, 2019

மஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்

பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டாரவெல தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரித்த அவர் மேலும் தெரிவிக்கையில் :

20 ஐ கொண்டுவந்தால் இந்த நாடு அழிந்து விடும். எனவே மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜேவிபி யுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அப்போது அந்தக் கூட்டணியிலுள்ள சிலர் கூறினார்கள். அவன் விலகினால் விலகிப்போகட்டும். விலகி அவனால் எங்குதான் போகமுடியும். அவனுக்கு அந்தளவுக்கு அரசியல் பலம் இருந்தால் பார்த்துக்கொள்வோம் என்றார்கள். எதிர்கட்சித் தலைவர் எங்களுடன் பேச வந்தார். அவன் இப்போது தாமரை மொட்டை விட்டு வெளியேறி விட்டானா? இல்லையே.

இவர்கள் நாயிலிருக்கும் உண்ணிகளை போன்று. ஆனாலும் மஹிந்தவுடன் உள்ள பலர் ஜனாதிபதி முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment