Sunday, March 17, 2019

''இலங்கையின் சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு'' - பழமைவாய்ந்த சிந்தனையாளர்

ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளரும், பழமைவாய்ந்த சிந்தனையாளருமான ஜெப் ஸ்மித் தயாரித்துள்ள ''இலங்கையின் சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு'' என்ற தலைப்பிலான அறிக்கையின் படி, இலங்கையில் மீண்டும், ராஜபக்ஸக்கள் ஆட்சிக்கு வந்தால், இலங்கை - அமெரிக்க உறவில் பாரிய முறிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடன் பல்வேறுபட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா அதிகரித்த முன்னுரிமையை அளிக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதில் இருந்து, இலங்கை – அமெரிக்க உறவுகள், நிமிர்ந்த நடையில் இருந்தன.

இந்த நிலையில் இலங்கையின் ஆட்சியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து, மீண்டும் ராஜபக்ஸக்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலை உருவாகலாம்.

2015 இல் ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்தாலும், அடுத்து வரவுள்ள தேர்தல்களில் செல்வாக்குமிக்க, பலம் பொருந்திய ராஜபக்ஷ குடும்பத்தினர், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என, பல அரசியல் சிந்தனையாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இது நிறைவேறினால், கடந்த 2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து ஏற்படுத்தப்பட்ட இலங்கை - அமெரிக்க நல்லுறவில் பல முறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராஜபக்ஸக்களின் ஆட்சி அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்ட நாள் முதல், இலங்கை சுதந்திரமான, திறந்த நாடாக மாறியதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில் இலங்கையின் அடுத்த ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றினாலும், இலங்கை - அமெரிக்க நல்லுறவை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஆர்வம் காட்ட வேண்டும் என, தனது அறிக்கையின் மூலம், ஜெப் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment