Saturday, March 16, 2019

பிணை முறி மோசடி, எனது தவறு இல்லை - பிரதமர்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி, தனது தவறு இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக நேற்றைய ''டெய்லி மிரர் பத்திரிகை'' செய்தி பிரசுரித்திருந்தது. அண்மைக்காலமாக முறி மோசடி தொடர்பில் பிரதமர் தன்னை பாதுகாக்கு செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் மத்திய வங்கியில் முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெறவில்லை எனவும் பிரதமர் தெரிவித்து வருவதாக விமர்ச்சிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இந்த முறி மோடி தொடர்பில் அழுத்தம் அதிகரித்த நிலையில் இது குறித்து வௌிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ஆராயுமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயற்படும் முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சிக்குள் நெருங்கிய மூன்று சட்டத்தரணிகள் உள்ளடங்கிய குழுவை நியமித்தார்.

காமினி பிட்டிப்பன, மகேஸ் களுகம்பிட்டிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. ஆனால், பிரதமரால் நியமிக்கப்பட்ட மூன்று சட்டத்தரணிகளுக்கும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், மோசடி இடம்பெறவில்லை என்றால் முறிகள் தொடர்பில் தௌிவுள்ள ஒரு குழுவை நியமித்து இது தொடர்பில் ஆராய்வதில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment