Sunday, March 10, 2019

பாதீடு தோற்கடிக்கப்பட வேண்டும் - அனைத்து நிறுவன ஊழியர் சங்கம்

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட வேண்டும் என, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த பாதீட்டை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என, அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, அச்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனை கூறினார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், தனியார் துறையினருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment