Friday, March 22, 2019

இந்நாட்டின் நீதித்துறையின் சீத்துவத்தை போட்டுடைக்கும் நாகானந்த கொடித்துவக்கு.

இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் தங்களிடம் சேவை நாடிவரும் வாடிக்கையாளர்களான பெண்களிடம் பணம் இல்லாதபோது அவர்களது காதுகளில் இருக்கக்கூடிய தோடுகளையும் கழுத்திலிருக்கக்கூடிய தங்க சங்கிலிகளை பிடிங்கி எடுக்கும் கீழ்தரமான நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேவை நாடிவரும் ஆண்கள் விளக்க மறியலுக்கு செல்லும்போது அவர்களது மனைவி மாருடன் சட்டவிரோதமாக பலாத்கார பாலியல் உறவு கொள்வதாகவும் அவர் சாடுகின்றார்.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்நாட்டில் இடம்பெறும் பல்வேறுபட்ட மோசடிகளுக்கு எதிராக தனி மனிதனாக போராடி வருகின்றார். இதன்காரணமாக அவர் தொடர்ந்தும் சட்டத்தரணியாக செயற்பட முடியாது என உச்ச நீதிமன்றினால் மூன்று வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்தது.

No comments:

Post a Comment