Thursday, March 14, 2019

ஐ.நா வின் பிரேரணையிலுள்ள சகல விடயங்களுடனும் உடன்படமாட்டோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் சகல விடயங்களுடனும் உடன்பட மாட்டோம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பென தெரிவித்துள்ளார்.

பாதீடு தொடர்பாக இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மனித உரிமைகள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமானது இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்ற வெளிநாட்டு சக்திகளுக்கு இடம்கொடுக்கின்றது எனத் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கை யாது என்ற கேள்வியை எழுப்பியபோதே திலக் மாரப்பென மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், மனித உரிமைகள் பேரணையின் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஊதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், அந்த அறிக்கையிலே வடகிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் அந்தக்கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம். காரணம் நாம் இதுவரை அவ்வாறான காணிகள் 90 வீதத்தினை விடுவித்து விட்டோம். மிகச் சிறிய கொகை காணியே இன்னும் விடுவிக்கப்படவுள்ளது.

இவ்வாறு பல காரணிகள் உள்ளது அவற்றை நாம் அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே கால அவகாசத்தையும் கேட்டுள்ளோம் என்றார்.

1 comment:

  1. I am genuinely grateful to the owner of this web site who has shared this enormous paragraph at at this place.

    ReplyDelete