பாரத பிரதர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்ய முடியாது என்றும் இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கையை குப்பைக் கூடைக்கு வீசுமாறும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாநில அந்தஸ்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌவுந்திரராஜனுக்கு டில்லியின் கொள்கைகள் தெரியாது.
இதுகுறித்து டில்லிதான் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். ஏழு பேர் விடுதலைக்கு டில்லி இணங்காது எனத் தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, அவர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment