Friday, March 15, 2019

சினிமா பாணியில், தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட குடும்ப தலைவர், உயிருக்கு போராடுகிறார்

கொழும்பு - பிட்டகோட்டே பகுதியில் அமைந்துள்ள தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்னால், 62 வயதான குடும்ப தலைவர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குழுமியிருந்த மக்கள், தற்கொலைக்கு முயற்சித்த நபரை காப்பாற்றியுள்ளதுடன், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது எரிகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் நபருக்கு கொழும்பு தேசிய மருத்துசிவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வறுமை காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள், கந்துவட்டிக்கு பணம் பெற்று, அதனை மீள செலுத்தமுடியாத நிலையில் அருகிலுள்ள ஆளுநர் அலுவலகங்களுக்கு முன்னால் குடும்பத்துடன், தீவைத்து தற்கொலை செய்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment