Sunday, March 10, 2019

''கிராமத்திற்கு கொண்டு செல்வோம்'' வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்வோம் எனும் வேலைத்திட்டம் இன்று களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளான களுத்துறை, புளத்சிங்கள, பண்டாரகம, மத்துகம, அகலவத்தை, ஹொரண, பாணந்துறை, பேருவளை என்பவற்றில் குறித்த வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், வீடு வீடாக சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறியவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்டத்திலுள்ள கட்சிக் குழுக்களை வலுப்படுத்துதல், புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளுதல், மக்களின்; பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment