Friday, March 15, 2019

பிரித்தானியா கொண்டுவரும் புதிய அத்தியாயம் இலங்கை ராணுவத்திற்கு ஆபத்தானது - சியாமேந்திர விக்கிரமாராச்சி

மிகவும் ஆபத்தான அத்தியாயம் ஒன்று பிரித்தானியாவினால் புதிதாகக் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் அடங்கியுள்ளதாக, பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவத்தினரை நாட்டில் கைது செய்வது குறித்தே பிரித்தானிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் புதிய அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த அத்தியாயம் மிகவும் ஆபத்தானதாகும் என்று, வியத்மக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அண்மையில் கவலை வெளியிட்டுள்ளார். இவற்றை பார்க்கும்போது நாட்டின் உள்ளக விவகாரங்கள் எந்தளவு தூரத்திற்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றது என, சியாமேந்திர விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment