Saturday, March 9, 2019

முன்னறிவிப்பின்றி தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு - அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள பயணிகள்

தொடரூந்து நிலைய கட்டுப்பாட்டாளர்களும், தொடரூந்து சாரதிகளும் திடீரென பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டமையினால், பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விநியோக நடவடிக்கைகளின் போது, தொடரூந்து கட்டுப்பாட்டாளர்களுக்கும், தொடரூந்து நிலைய அதிபர்களுக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்படுவதாக தெரிவித்து, இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

எவ்வாறாயினும் முன்னறிவிப்பின்றி தொடரூந்து சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளமை, பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment