Monday, March 11, 2019

மூன்று வயதுக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மூன்று வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான 19 வயதான சிவானந்தம் ஜனு என்ற இளம் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீட்டிக்கு சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இளம்தாயின் இறப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment