Saturday, March 9, 2019

ஒன்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது - போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு

மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒன்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகையை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.

இவை ''மெத்தம்பிட்டி மெயின்'' என்ற விஷ போதை மாத்திரை என இனங்காணப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருந்து பொதி செய்து இவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதணி ராக்கையில் சூட்சுமான முறையில் மறைக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொதியை பெறுவதற்காக மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு வந்த 27 வயதான இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிரையில் தப்பிச்ச சென்ற இளைஞரை கைது செய்வதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment