Sunday, March 10, 2019

இலங்கை தாதிமாருக்கு அமெரிக்காவில் வேலை

இலங்கை தாதிமாருக்கு அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பம் முதன் முறையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கைதாதி ஒருவர் இந்த அரிய சந்தர்ப்பத்தை பெற்றுள்ள சிறப்பிற்குரியவர் ஆவர். இந்த தகவலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுளள்ளது. இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் பொருட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மேலும் 25 தாதியர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தநிலையில், American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக 3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது. ஆகவே அமெரிக்காவில் தொழிலை பெற்றுக்கொள்ளும் இலங்கை தாதியர்களுக்கு மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் அமெரிக்க US $ 5000 டொலர்களாகும்.

No comments:

Post a Comment