Saturday, March 16, 2019

அரசியலே தெரியாதவர்கள், அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிடுவது நகைப்பாக உள்ளது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அதற்காக 20 திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜேவிபியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார். அரசியலை பற்றி தெரியாதவர்கள், அரசியல் அமைப்பை பற்றி கருத்து வெளியிடுவது நகைப்பாக உள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்கள் கோருவதில் நியாயமில்லை. அதனை தீர்மானிக்க வேண்டியது நாட்டு மக்களே என, அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் நுகேகொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment