Wednesday, March 13, 2019

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த மாணவர், சற்று முன்னர் கைது

அரசாங்கத்தினால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி, குரல் கொடுத்த பல்கலைக்கழக மாணவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என, பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்றதொரு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை, மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அவசரமாக களைந்து சென்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில், குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மாலி பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment